search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின்"

    • மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது.
    • தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்க ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, உங்களுக்கு இருக்கிறதா, நிச்சயம் செய்வீர்களா?

    இந்த தேர்தல் மூலம் மாநில உரிமைகளை மீட்க வேண்டும். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையையும் மத்திய பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமைகள் அடகு வைத்து விட்டார்கள். மத்திய அரசு கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த நிதியும் வழங்கியது இல்லை.

    இந்த 5 வருஷத்தில் வரியாக 6.30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கட்டி இருக்கிறோம். மத்திய அரசுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய் வரி கட்டினோம் என்றால் மத்திய அரசு நமக்கு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. ஒவ்வொருவருக்கும் வெறும் 28 பைசா தரும் பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும்

    மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது. ஆனால் பிரதமர் வர வில்லை. நான் உங்க அப்பன் வீட்டு காசையா கேக்குறேன் என கேட்டேன், நிர்மலா சீதாராமன் என்னை கூப்பிட்டு மிரட்டினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

    மத்திய பா.ஜ.க. அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐ.பி.எல். அணிகளை போல அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளது. நமது இந்தியாவை காப்பாற்ற வேண்டும். தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதையடுத்து அவர் திருமங்கலத்தில் பிரசாரத்தின் போது எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காததை சுட்டிக்காட்டி கையில் மீண்டும் செங்கல்லை தூக்கி காண்பித்து பேசினார்.

    • தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும்.
    • உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, டாக்டர் பொன் கவுதமசிகாமணி எம்.பி., மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., விழுப்புரம் எம்.எல் .ஏ. டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர மோடி நினைத்து செயல்பட்டு வருகிறார்.

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவி பிரமாணம் செய்யவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதி பதவிபிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியதை தொடர்ந்து தான் எனக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமலாக்கதுறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள் தான் பா.ஜனதா அரசு. அமலாக்க துறையை அனுப்பி தான் பா.ஜ.க.விற்கு 2500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொன்முடி பேசினார்.

    • உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம்.
    • விருதுநகர் காரியாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    விருதுநகர் காரியாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருப்புக்கோட்டை, மதுரை திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இன்று தேனி, திண்டுக்கல், மதுரையில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு விமானம் மூலம் இரவு சென்னை திரும்புகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் சென்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் சென்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் பெரியார் தூண் காந்தி சாலையில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதிக்குட்பட்ட செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் பேசுகிறார். இறுதியாக திருவண்ணாமலை கீழ் பெண்ணாத்தூர் பஸ் நிலையம் அருகே பேசுகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி மாவட்டக்கழக செயலாளர்கள் பிரமாண்ட கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    அவர் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் தொகுதியில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    மாலை 6 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு இரவு 8.30 மணிக்கு தேனி தொகுதிக்கு சென்று உசிலம்பட்டியில் பேசுகிறார். இரவு 9.15 மணிக்கு ஆண்டிப்பட்டியில் பேச உள்ளார்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு தேனி பங்களாமேடு பகுதியிலும், 11 மணிக்கு பெரியகுளம் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் ஓட்டு வேட்டையாடுகிறார். மாலை 5 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்கு செல்கிறார். அங்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலும், மாலை 6.15 மணிக்கு நத்தம் நகரிலும் ஓட்டு வேட்டையாடுகிறார்.

    அதன்பிறகு மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். இரவு 7 மணிக்கு மதுரை உமச்சிக்குளம் பகுதியிலும், 7.45 மணிக்கு மதுரை புதூர் பகுதியிலும் பேசுகிறார்.

    அதன் பிறகு சென்னை புறப்பட்டு வருகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதிக்கு சென்று பேசுகிறார். அதன் பிறகு ஆரணி தொகுதிக்கு செல்கிறார்.

    மாலை 6 மணிக்கு செய்யாறு, 7 மணிக்கு வந்தவாசி, 8 மணிக்கு சேத்துப்பட்டு நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.


    அதன் பிறகு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு 9 மணிக்கு கீழ்பொன்னாத்தூர் பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். மறுநாள் (26-ந்தேதி) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை, 10.45 மணிக்கு கலசப்பாக்கம், 11.45 மணிக்கு செங்கம், 12.30 மணிக்கு திருப்பத்தூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    அன்று மாலை 5 மணிக்கு ஜோலார்பேட்டை பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். அதன் பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். மாலை 5.45 மணிக்கு வாணியம்பாடி, 6.30 மணிக்கு ஆம்பூர், 7.30 மணிக்கு பேரணாம்பட்டு, 8.15 மணிக்கு குடியாத்தம், 9 மணிக்கு பள்ளிகொண்டா, 9.30 மணிக்கு வேலூர் பகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    27-ந்தேதி (புதன்கிழமை) அரக்கோணம் தொகுதியில் ஓட்டு வேட்டையாட உள்ளார். அன்று காலை 10 மணிக்கு ஆற்காடு, 10.15 மணிக்கு ராணிப்பேட்டை, 11.30 மணிக்கு வாலாஜா, 12.30 மணிக்கு சோளிங்கர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திருத்தணிக்கு வந்து ஆதரவு திரட்டுகிறார்.

    மாலை 6 மணிக்கு அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் மணிக்கூண்டு அருகே நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட உள்ளார்.

    28-ந்தேதிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரம் தொடங்கும்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதyமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். அவர், பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குகள் திரட்டுகிறார். திருச்சியில் நேற்று பிரசாரத்தை தொடங்கிய அவர் வருகிற 17-ந் தேதி மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

    அவர், மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்துள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இன்று காலை 8.30 மணி முதல் திறந்த ஜீப்பில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்த தகவலை தி.மு.க. சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான எஸ்.மதன்மோகன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது. இதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் அவருடைய பிரசார பயண விவரம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை உதயநிதி மேற் கொள்கிறார்.
    • 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

    சென்னை:

    தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அதேபோல தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தை தொடங்குகிறார். சேப்பாக்கம் தொகுதியில் நாளை காலை 8.30 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை உதயநிதி மேற் கொள்கிறார்.

    சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இது தொடர்பாக சேப்பாக்கம் பகுதி செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான எஸ்.மதன் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குவதால் சேப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் வட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் பிரசாரத்தை தொடர்ந்து மறுநாள் திருச்சுழியில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
    • உதயநிதி ஸ்டாலின் 39 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்று டன் இணைந்து எதிர்கொள்கிறது. இன்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்தும் தெரிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


     இதையடுத்து தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தி தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். நாளை மறுநாள் (புதன்கிழமை) தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதி வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதை தொடர்ந்து உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். வேட்பு மனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.

    அதன் பிறகு வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்ய 17 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வார இறுதியில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவரது சூறாவளி சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பூர்வீக ஊரான திருவாரூரில் 23-ந் தேதி (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.

    அதில் அவர் நாகை, தஞ்சை, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இந்த பிரசாரக் கூட்டம் எப்போது நடைபெறும் என்ற நேரம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஓரிரு நாட்களில் அதுபற்றி தெரிய வரும் என்று கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கி 39 தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். மொத்தம் அவர் 15 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார். தமிழகம் முழுவதும் 15 ஊர்களில் அவர் பொதுக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அதுபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 39 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    • கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

    2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை, சிந்தாதிரி பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

    இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது.

    நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை தயாநிதி மாறன் எம்.பி. மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை சின்னப்பிள்ளைக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
    • சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

    'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
    • சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

    மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
    • சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    சனாதன பேச்சு தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு, ஆனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2-ம் தேதி தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள் `சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

    உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும். எனவே இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

    திமுக எம்.பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அதில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. ஆனால் எந்த விதமான உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது என்று இந்த வழக்குகளை முடித்து வைத்தார். எதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்ப முடியாது எனவும் நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீங்கள் ஒன்றும் சாமானியர் கிடையாது, நீங்கள் அமைச்சர்.
    • விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஒரு விழாவில் பேசும்போது சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசினார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா மந்திரிகள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்து அமைப்பை சேர்ந்த பல்வேறு தரப்பினர் பல மாநிலங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபகள், "நீங்கள்  அரசியலமைப்பின் 19(1)(ஏ)- பிரிவின் கீழ் உங்களது கருத்து உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்.  அரசியலமைப்பு 25-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கும் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்.

    தற்போது உங்களுக்கு உள்ள உரிமையின்படி மேல்முறையீட்டிற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் பேசியதின் விளைவுகள் உங்களுக்கு தெரியாதா?. நீங்கள் ஒன்றும் சாமானியர் கிடையாது, நீங்கள் அமைச்சர். விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ×